உங்கள் சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள்! டிரம்ப் குடும்பத்திற்கு வந்த கொலை மிரட்டல்!
உங்கள் சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள்! டிரம்ப் குடும்பத்திற்கு வந்த கொலை மிரட்டல்!
ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலையை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பலர் இன்ஸ்டாகிராம் வழியாக டிரம்ப் குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து ஈரான் தலைநகரில் இருந்து உக்ரைன் தலைநகருக்கு 176 பேருடன் சென்ற பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் மகளும் அவரது சிறப்பு ஆலோசகருமான இவான்கா டிரம்புக்கு சமூக வலைதள பக்கத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்த பிறகு தான் டிரம்ப் குடும்பத்தார் மீது ஈரான் மக்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஈரான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், இவான்கா அவரது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, உங்கள் சவப்பெட்டிகளை இருவரும் தயார் செய்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் டிரம்ப் குடும்பத்தாரை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.