அடக்கடவுளே.. யாரவது ஒருத்தவுங்க வந்து பார்த்திருக்க கூடாதா? நீச்சல் குளத்தில் மூச்சு விட முடியாமல் தத்தளித்த 2 குழந்தைகள்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!!



kids-drown-swimming-pool-cctv-video-viral-fzsq9m

எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோ, பலரையும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. வீட்டிலேயே உள்ள நீச்சல் குளத்தில் விளையாடிய இரண்டு சிறுவர்கள் திடீரென ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

நீச்சல் குளத்தில் நடந்த விபரீதம்

தகவலின்படி, வீட்டின் நீச்சல் குளத்தில் விளையாட அனுமதிக்கப்பட்ட அந்த இரண்டு குழந்தைகள், சில நேரத்திலேயே ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். தண்ணீரின் ஆழம் அதிகமானதால் அவர்கள் வெளியே வர முடியாமல் நீண்ட நேரம் தத்தளித்துள்ளனர். அருகில் யாரும் இல்லாத நிலையில், அவர்களுக்கு உடனடி உதவி கிடைக்காமல் உயிரிலந்துள்ளனர்.

சிசிடிவியில் பதிவான தருணங்கள்

இந்த முழு சம்பவமும் அங்கிருந்த CCTV காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது. வீடியோவில் குழந்தைகள் தண்ணீரில் போராடும் காட்சிகள், பார்க்கும் பலரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: பள்ளியில் நடந்த மாறுவேட போட்டிக்கு அழகரிக்க மகனுக்கு பெயிண்ட் பூசிய தாய்! இறுதியில் நேர்ந்த விபரீதம்.... அவதிப்படும் சிறுவனின் அதிர்ச்சி வீடியோ!!!

கவனக்குறைவு குறித்து எச்சரிக்கை

இதையடுத்து, இணையவாசிகள் பலரும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர். நீச்சல் குளம் போன்ற ஆபத்தான இடங்களில் குழந்தைகளை தனியாக விடுவது தவறு என வலியுறுத்துகின்றனர். சிறிய கவனக்குறைவுதான் பெரிய உயிரிழப்புக்கு காரணமாக மாறியதாகவும், பெற்றோர் எப்போதும் கண்காணிப்பு அவசியம் எனவும் கருத்துக்கள் பதிவாகின்றன.

 

இதையும் படிங்க: கையை அசைத்து என்னை காப்பாத்துங்க... கத்தியும் யாருமே உதவிக்கு வரல! விளையாட்டுன்னு நினைத்த கொடுமை.... கண்ணெதிரே துடிதுடித்து இறந்த 33 வயது வாலிபர்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!!