யானை செய்த காரியத்தால் உச்சகட்ட கடுப்பில் இருக்கும் முதலை.. வைரல் வீடியோ.



elephant-teases-crocodile-viral-video

சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாக முதலை மற்றும் பாம்பு தொடர்பான வைரல் வீடியோக்கள் பரவி வருகின்றன. இவற்றில் ஒன்று தற்போது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

ஒரு யானையின் சிறு சேட்டைக்குப் பதிலாக, முதலை காட்டிய எதிர்வினை பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

தரையில் ஓய்வெடுத்த முதலையின் அமைதிக்குள் யானையின் சலசலப்பு

வெப்பமான நாளில் ஒரு முதலை, நிலத்திலே அமைதியாக படுத்து ஓய்வெடுத்து வருகிறது. அந்த வழியாக வந்த யானை, அருகில் இருக்கும் முதலையை பார்த்ததும் அதனது தும்பிக்கையால் மணலை வாரி வாரி முதலை மீது போட தொடங்குகிறது.

இதையும் படிங்க: மொபைல் போன் தண்ணீரில் விழுந்தால் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா? இப்படி மட்டும் செய்யவே கூடாதாம்! இனி தெரிஞ்சுக்கோங்க...

கடுப்பில் வெடித்த முதலை

முதலில் அமைதியாக இருந்த முதலை, யானையின் இந்த அட்டகாசத்தை பொறுமையாக ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தொடர்ந்து மணல் வீசப்படுவதால், இறுதியில் அதற்கும் பொறுமை கெட்டுவிடுகிறது. முதலை அங்கிருந்து நகர, யானை மீண்டும் அதனை மனம் குளிரும் வரை மணலால் சூழ்ந்துவிடுகிறது.

இணையவாசிகளை கவர்ந்த விசித்திர வீடியோ

இந்த விளையாட்டான காட்சி, பார்ப்பவர்களுக்கு சிரிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த வீடியோவை தங்களது சேட்டிக்கார நண்பர்களுக்கு பகிர்ந்து, நகைச்சுவையுடன் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Video : சரியாக மூடப்படாத காரின் கதவு! அடுத்தடுத்து சரமாறியாக கீழே விழுந்த தாய்-மகள்! அடுத்த நொடியே நடந்த திக் திக் காட்சி....