கோத்தபாய ராஜபக்சேயின் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்!

கோத்தபாய ராஜபக்சேயின் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்!



cricket players wishes to kothabaya rajabakshe


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றிப்பெற்றுள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய மற்றும் மஹெல ஜெயவர்த்தனே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றிப்பெற்றுள்ள நிலையில் இந்திய பிரதமர் வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதில் நேற்று மாலை முதலே வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 7-வது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே நாளை பதவியேற்கவுள்ளார்.

தற்போது நல்ல ஆட்சியை வழங்குவதற்கான உங்களுக்கான நேரம் இது. நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். அதேபோல் வெற்றி பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு, இலங்கை மக்களை ஒற்றுமைபடுத்தவும், அவரது கனவு திட்டங்களை செயல்படுத்தவும் ஆற்றல் அவருக்கு கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன் என மஹெல ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.