இரவு நேரத்தில் மட்டும் வெளிவரும் சைலன்ட் கில்லர்..! கடிச்சா வலியே தெரியாது! நடுங்க வைக்கும் வீடியோ..!!!



common-krait-snake-viral-video-fact-check

கோடை காலத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும் நிலையில், கருப்பு நிறத்தில் வெள்ளை வரிகளைக் கொண்ட கரெய்ட் பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கூறப்பட்ட சில தகவல்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, பாம்பு நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

வைரலான வீடியோவில் என்ன கூறப்பட்டது?

சமூக வலைதளங்களில் பரவும் அந்த வீடியோவில், 'காமன் கிரெய்ட்' அல்லது கட்டுவிரியன் வகையைச் சேர்ந்த இந்த பாம்பு பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது கடித்தால் உடனடியாக வலி தெரியாது என்றும், பலர் தூக்கத்திலேயே உயிரிழக்க நேரிடும் என்பதால் இதை 'சைலண்ட் கில்லர்' என்று அழைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பாம்பின் பற்கள் மிகவும் சிறியதாக இருப்பதால், கடித்த தடயமோ வலியோ தெளிவாக தெரியாது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிகிச்சை பெற தாமதிப்பார்கள் என்றும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அய்யோ.... தூங்கி கொண்டிருந்த போது தலைமுடியில் புகுந்து ஆட்டம் காட்டிய பூரான்! இறுதியில் லைட் அடித்து... .. அதிர்ச்சி வீடியோ!

நிபுணர்கள் மறுக்கும் தகவல்கள்

லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த பாம்பு நிபுணர்கள், கரெய்ட் பாம்பு கடித்தவுடன் மனிதர்கள் உடனடியாக உயிரிழப்பார்கள் என்பது தவறான தகவல் என கூறியுள்ளனர்.

தகவலின்படி, இந்த பாம்பின் விஷத்தில் உள்ள நியூரோடாக்சின் நரம்பு மண்டலத்தை மெதுவாக பாதிக்கிறது. கடித்த பிறகு ஆரம்ப நிலையில் வயிற்று வலி, உடல் சோர்வு, கண் இமைகள் தொங்குதல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று அவர்கள் விளக்குகின்றனர்.

சரியான சிகிச்சை பெற்றால் உயிர் காக்கலாம்

மருத்துவர்களின் கூற்றுப்படி, பாம்பு கடித்த உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று ஆன்டி-வெனம் சிகிச்சை பெற்றால் உயிரைக் காப்பாற்ற முடியும். சிகிச்சையை தாமதப்படுத்தாமல் பெறுவது மிகவும் முக்கியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், மந்திரவாதிகள், மூலிகை வைத்தியம் அல்லது நாட்டு வைத்தியங்களை நம்பி நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: ஐயோ.... எனக்கு ஒரு நிமிஷம் கூட நிம்மதி இல்லை! குழந்தை வளர்ப்பதில் உள்ள சிரமம் குறித்து குளியலறையில் உட்கார்த்து கதறி கண்ணீர் விட்டு அழும் தாயின் வீடியோ !!!