மழலையர் பள்ளியில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொலை: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..! 



China Guangdong 6 Killed in Kinder Garden

சீனாவில் உள்ள Guangdong மாகாணத்தில் Lianjiang கவுண்டி நகரை சேர்ந்தவர் வூ (Wu). 

இவர் சம்பவத்தன்று அங்குள்ள மழலையர் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு திடீரென சற்றும் எதிர்பாராத வகையில் பயங்கர ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார். 

இந்த தாக்குதலில் 3 சிறுவர்கள், 2 பெற்றோர் மற்றும் ஒரு ஆசிரியர் என 6 பேர் கொல்லப்பட்டனர். 

 

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் வூ-வை கைது செய்தனர். 

அவரிடம் விசாரணை நடந்து வருகிறது, மழலையர் பள்ளிகளில் அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுவதாக உள்ளூர் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.‌