சிறைச்சாலையில் பூனையின் உடலில் இருந்த விநோத பொருள்! பரிசோதிப்பில் நடந்த அதிர்ச்சி! திடுக்கிடும் சம்பவம்..



cat-used-for-drug-smuggling-in-costa-rica-prison

குறும்புத்தனமும், பாசத்தினாலும் அடையாளம் காணப்படும் பூனைகள், இப்போது சர்ச்சைக்குரிய செய்தியில் இடம் பெற்றுள்ளன. கோஸ்டா ரிகா நாட்டின் போகோசி நகரில் உள்ள உயர்தர பாதுகாப்பு வளையத்தில் அமைந்த சிறைச்சாலையில், பூனை வழியாக நடைபெற்ற அதிர்ச்சிகரமான அத்துமீறல் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைச்சாலையின் சுவர் முழுவதும் பாதுகாப்பு நோக்கில் அதிநவீன கம்பி வலைகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், ஒரு பூனை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நீண்ட நேரம் சுற்றியிருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்தனர். மேலும், அதன் உடலில் எதையோ மறைத்து வைத்திருப்பது போல காணப்பட்டதால், அவர்கள் நெருங்கிச் சென்று பூனையை பரிசோதித்தனர்.

cat smuggling incident

அதில் இரு பாக்கெட்டுகள் பூனையின் உடலில் ஒட்டப்பட்டிருந்ததை கண்டனர். அவற்றை திறந்து பார்த்த போது, 235 கிராம் கஞ்சா மற்றும் 67 கிராம் ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த அதிர்ச்சியான தகவலால் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

இதையும் படிங்க: ஆண்களிடம் அதிகரித்த தற்கொலை.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்.!!

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பூனை வழியாக சிறைக்கைதிகளுக்கு வெளியில் இருந்து போதைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. பூனை உடனடியாக மீட்கப்பட்டு, ஒரு கால்நடை பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, இந்த அத்துமீறலுக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் கோஸ்டா ரிகா மட்டுமின்றி, உலக அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. விலங்குகளை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது எவ்வளவு ஆபத்தானதும், சிக்கலானதும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபிக்கிறது.