ஆண்களிடம் அதிகரித்த தற்கொலை.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்.!!



Increased suicide among men shocking information revealed

மனதில் உள்ளதை வெளியே சொல்ல முடியாமல் ஆண்கள் தற்கொலை செய்வதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

தற்கொலை தொடர்பான விஷயங்களில் ஆண்களின் உளவியல் ரீதியான காரணங்கள் மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நாளுக்குநாள் அதிகரித்து வரும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களின் எண்ணிக்கை மட்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. 

உயரும் தற்கொலை செய்பவர்களின் எணிக்கை :

அதாவது ஆண்களிடையே தற்கொலைகள் சமீபத்தில் அதிகரித்து வருவதாகவும், கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் தற்போது தற்கொலை செய்துக்கொள்பவர்களின் ஆண்களின் எண்ணிக்கை 72% அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: காதல் விஷயத்தில் யார் டாப்? ஆண்களா? பெண்களா?

suicide

விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

ஆண்கள் தங்களின் மனச்சுமைகளை வெளியே சொல்லாமல் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் அதைப்பற்றி முழுக்க சிந்தித்து தனது மனநிலை குறித்து வெளிப்படுத்தாமல் இவ்வாறான விபரீத முடிவு ஏற்படும் எடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உளவியல் ரீதியாக பாதிப்பு :

பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை, பொய்க் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகளில் சிக்கிய ஆண்கள் பெரும்பாலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் உரிய சட்ட திருத்தங்கள் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிணத்தைக்கூட விடமாட்டிங்களா? பெண்ணின் சடலத்துடன் உடலுறவு..!