ஒரே நாளில் கோடீஸ்வரியாக மாறிய இளம்பெண்! கடைசியில் காத்திருந்த சோகம்!



America

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் மகாணத்தில் வசிப்பவர் ரூத் பலூன். இவருக்கு ஒரு நாள் திடிரென அவரது வங்கி கணக்கில் 37 மில்லியன் டாலர் டெபாசிட் ஆகியுள்ளதாக மொபைல் போனில் மெசேஜ் வந்துள்ளது.

முதலில் எப்படி வந்தது என தெரியாமல் இருந்த ரூத் பின் நத்தார் பண்டிகையை ஒட்டி ஏதும் அதிஷ்டம் வந்திருக்கும் என நினைத்து அந்த மகிழ்ச்சியான செய்தியை தனது கணவரிடம் கூறியுள்ளார்.

America

இருவரும் சந்தோஷமாக தங்களது கொண்டாடத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு போன் கால் வந்துள்ளது. அதனை ஆன் செய்த ரூத்துக்கு ஒரு சோகமான தகவல் வந்துள்ளது.

அதாவது வங்கி அதிகாரி ஒருவரின் பிழை காரணமான இந்த தவறு ஏற்ப்பட்டு விட்டதாக கூறி பணத்தை அக்கவுண்டில் இருந்து எடுத்துவிட்டனர். சந்தோஷம் வந்த சில மணி நேரத்திலேயே ரூத்துக்கு இப்படி ஒரு சோக நிகழ்வும் நிகழ்ந்துள்ளது.