அதி வேகமாக வந்த ரயில்! தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன்! அடுத்த நொடி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த கொடூரம்! பகீர் வீடியோ....



odisha-teen-reels-train-accident

அதிரடி காட்சி தேடும் இன்றைய சமூக ஊடக உலகில் இளைஞர்களுக்கு இடையே ரீல்ஸ் உருவாக்கும் போட்டி கவலைக்கிடமாக உயர்ந்து வருகிறது. லைக்குகளுக்காக செய்யப்படும் ஆபத்தான முயற்சிகள் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கின்றன.

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் 15 வயது விஷ்வஜித் சாகு என்ற சிறுவன் தாயுடன் கோவில் தரிசனத்துக்குச் சென்றிருந்தான். பூஜை முடிந்தபின் அருகிலுள்ள தண்டவாளத்தில் மொபைலில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றபோது, அங்கு வேகமாக வந்த ரயில் நேரடியாக மோதியது. அந்த இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சோசியல் மீடியாவில் வைரலான வீடியோ

சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. பலரும் இவ்வாறு லைக் மோகம் காரணமாக நடைபெறும் துயர சம்பவங்களை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் குத்தாட்டம் போட்ட பெண் ஊழியர்கள்! ஓணம் பண்டிகை ஆட்டமாம்...வீடியோ வெளியாகி பரபரப்பு!

போலீசார் விசாரணை தொடக்கம்

இந்த மரண விபத்துக்கான முழு விவரங்களும் தற்போது போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றது. சமூக ஊடகங்களில் ஆபத்தான இடங்களில் வீடியோ எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் அதிகரித்து வருகிறது.

இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெரக்கூடாது என பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் மிக அதிகம் உள்ளது.

Tragic accident occurred in Puri district, #Odisha A 15-year-old boy was hit by train & died near #Janakdeipur railway station. The accident occurred while he was filming a video reel on his mobile phone on the railway track.#Reels#reelsvideopic.twitter.com/XB613GdZX0

 

- Nikita Sareen (@NikitaS_Liv

e)

 

இதையும் படிங்க: நடுரோட்டில் பெண்ணை சரமாரியாக தாக்கிய கோவில் பூசாரி! தகராறில் கல்லை தூக்கி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!