செருப்பை கையில் வைத்து என்னோடு வண்டிக்கு முதல்ல பெட்ரோல் போடு இல்லாட்டி..! வாடிக்கையாளரின் பைக்கை தள்ளி விட்டு! பெரும் அட்டகாசம்... அதிர்ச்சி வீடியோ வைரல்!



lucknow-petrol-pump-woman-viral-video-incident

உத்தரபிரதேசம், லக்னோவில் உள்ள கோமதிநகரின் பத்திரகர்புரம் சதுக்கம் அருகே அமைந்த பெட்ரோல் பங்கில் நடந்த ஒரு சிறிய வாக்குவாதம், பரபரப்பான சண்டையாக மாறியதால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

ஒரு பெண் வாடிக்கையாளர், தனது வாகனத்திற்கு முதலில் பெட்ரோல் நிரப்பப்படவேண்டும் என வலியுறுத்தினார். வரிசையில் இருந்த ஆண்களிடம் அவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மேலும் தனது கையில் இருந்த செருப்பை தூக்கி மிரட்டும் வகையில் காட்டினார்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு எதிராக ஒருவர், "நீங்கள் இவ்வளவு நேரம் எங்கே இருந்தீர்கள்?" என கேட்டதற்காக, அவர் அவருடைய பைக்கை தள்ளிவிட்டு, தவறான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

இதையும் படிங்க: பசுவின் மடியிலிருந்து நேரடியாக பால் குடிக்கும் குழந்தை! அதிர்ச்சிகரமான காரணம்! பதறவைக்கும் வீடியோ..

இதையடுத்து, அந்த நபருடன் இருந்த மற்றொருவர் போலீசாரை அழைக்கும் முயற்சி செய்தபோது, பெண் அவரது கைபேசியை பறிக்க முயற்சித்தார்.

இந்த மோதல் நடக்கும்போது, பெட்ரோல் பங்கில் பணியாற்றும் ஊழியர்களோ, அங்கு வந்த பிற வாடிக்கையாளர்களோ தலையிடாதது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவ வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபலமான ஹோட்டலின் தோட்டத்தில் ஒரே உஷ் உஷ் சத்தம்! போய் பார்த்தால் ஒட்டுமொத்தமாக படம் எடுத்து, சீறி நின்ற தருணம்! பதறவைக்கும் வீடியோ வைரல்!