சிறுமியை பலாத்காரம் செய்து 8 முறை கருமுட்டை விற்பனை.! கள்ளகாதலனுக்கு உடந்தையாக இருந்த தாய்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!



young girl abused

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தனியார் மருத்துவமனையில் கருமுட்டையை விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல்துறைக்கு கடந்த மாதம் புகார் சென்றது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட மாலதி ஆகிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.  

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது.  ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு 16 வயதில் சிறுமி உள்ளார். அந்த சிறுமிக்கு 3 வயது இருக்கும்போதே அந்த பெண் தனது கணவரை பிரிந்தார். அதன்பிறகு ஈரோட்டை சேர்ந்த 40 வயதான பெயிண்டர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவருடன் அந்த பெண் குடும்பம் நடத்தி வருகிறார்.

சிறுமியின் தாய் தனியார் மருத்துவமனைகளில் தனது கருமுட்டையை விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் அந்த பெண்ணும், கள்ளக்காதலனும் ஜாலியாக வாழ்ந்து வந்தனர். பின்னர் சிறுமியையும் கருமுட்டை விற்பனை செய்வதில் ஈடுபடுத்த அவர்கள் திட்டமிட்டனர்.  இதற்காக சிறுமியிடம் வளர்ப்பு தந்தை பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும், பாலியல் பலாத்காரம் செய்வதும் நடந்து வந்துள்ளது.

இதன் மூலம் சிறுமிக்கு கருமுட்டை உருவானதும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருமுட்டையை விற்று வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக  ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதுபோன்று கருமுட்டை கொடுத்து பணம் பெற்று  வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கருமுட்டை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதற்காக சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இதற்கு புரோக்கராக மாலதி என்ற பெண் இருந்துள்ளார்.

இதுவரை சிறுமியிடம் 8 முறை கருமுட்டை பெற்றுள்ளனர். கருமுட்டை கொடுப்பதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று தாய் மற்றும் வளர்ப்பு தந்தை இருவரும் மிரட்டி வந்ததால் சிறுமி வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் சிறுமிக்கு அவர்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததால், மிகவும் மனவேதனை அடைந்த சிறுமி கடந்த மாதம் 20ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி சித்தி, சித்தப்பா ஆகியோரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியிருக்கிறார்.

இதையடுத்து இந்த விவகாரம் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய், தாயின் கள்ளக்காதலன், மாலதி ஆகிய 3 பேர் மீது போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நேற்று கைது செய்தனர்.