குடிபோதையில் தகராறு... தந்தையுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய மனைவி... இருவர் கைது.!

குடிபோதையில் தகராறு... தந்தையுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய மனைவி... இருவர் கைது.!



woman-and-her-father-arrested-for-killing-her-husband-s

கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவரை தனது தந்தையுடன் சேர்ந்து  மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்த இவர் தனது மனைவி சந்தியாவை கடுமையாக தாக்கியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சந்தியா தனது இரண்டு குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு சென்று விட்டார் .

tamilnadu

இதனைத் தொடர்ந்து நேற்று தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற ராமமூர்த்தி அங்கு வைத்து  தனது மனைவி சந்தியாவை அவரது தந்தையின் கண் முன்னே சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

tamilnaduஇதனால் ஆத்திரம் அடைந்த சந்தியா அவரது தந்தையின் துணையுடன் கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர்  ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தியா மற்றும் அவரது தந்தையை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.