விபத்தில் உயிரிழந்த கண்டக்டர்.! விசாரணையில் அம்பலமான மனைவியின் மாஸ்டர் பிளான்.! திடுக் சம்பவம்!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்ட முடையார்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் 43 வயது நிறைந்த வேல்துரை. இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பேச்சியம்மாள் என்ற உமா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வேல்துரை தனது குடும்பத்துடன் அடைக்கலப்பட்டணத்தில் மெக்கானிக் சுதாகர் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த கண்டக்டர்
சுதாகரின் மனைவி உடல் நலக்குறைவால் இரு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். வேல்துரை வழக்கமாக பாவூர்சத்திரம் வரை பைக்கில் சென்றுவிட்டு பின் பேருந்து மூலம் தென்காசிக்கு பணிக்கு சென்று வந்துள்ளார். அவ்வாறு அவர் அண்மையில் அதிகாலையில் தனது பைக்கில் பாவூர்சத்திரம் நோக்கி சென்றுள்ளார். அப்பொழுது அவர் நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத கார் ஒன்று வேகமாக வந்து அவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேல்துரை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: உடலுறவின் போது உயிரைவிட்ட மனைவி?.. நிர்வாணமாக்கி கட்டிவைத்து டார்ச்சர்.. கணவரின் பகீர் செயல்.!!
விபத்து அல்ல கொலை
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வேல்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் கார் மெக்கானிக் சுதாகர் உடையது எனவும், காரை ஓட்டி வந்தது அவரது நண்பர் ஆறுமுகம் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தது.
கள்ளக்காதல் விபரீதம்
அதாவது வேல்துரையின் மனைவி உமா, சுதாகரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் வேல்துரை பணிக்கு சென்ற பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து வேல்துரைக்கு தெரிய வந்த நிலையில் அவர் உமாவை கண்டித்துள்ளார். வேறு வீடு மாறவும் திட்டமிட்டுள்ளார்.இந்த நிலையிலேயே தங்களை பிரித்து விடுவாரோ என்ற அச்சத்தில் சுதாகர் மற்றும் உமா இருவரும் திட்டமிட்டு சுதாகரின் நண்பர் ஆறுமுகத்தின் உதவியுடன் இந்த விபத்து போன்ற கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் சுதாகர், பேச்சியம்மாள் என்ற உமா மற்றும் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கணிசமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!