இணை பிரியாத தம்பதிகளாக நேர்ந்த சோகம்.. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்.! 



Heartbreaking Tragedy: Wife Dies in Shock After Husband’s Death in Kerala

தன்னுடன் அன்பாக இருந்த கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்த மனைவியும் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தம்பதி: 

கேரளா மாநிலத்தில் உள்ள பாலா, புத்தன்பள்ளி வாழையிலை பகுதியில் வசித்து வருபவர் குரியன் ஜோசப் (வயது 74). இவர் வியாபாரி ஆவார். கேரளா காங்கிரஸ் வழிநடத்தல் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார். இவரின் மனைவி ஷெர்லி (வயது 71). 

இதையும் படிங்க: உங்க பொண்ணை பாருங்க... வீடியோ காலில் மாமனார், மாமியார்கு அந்த காட்சியை காட்டிய கொடூரம்! அடுத்து அந்த வார்த்தையை சொல்லிவிட்டு போனை கட் செய்த கணவன்! அடுத்து நடந்த பயங்கரம்.!!!

மரணம்: 

கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி வயது மூப்பு காரணமாக குரியன் இயற்கை எய்தினார். இதனால் ஷெர்லி மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், கணவரை நினைத்து வருந்தி இருக்கிறார். 

KERALA

சடங்கு: 

இதனிடையே, நேற்று குரியனின் இல்லத்தில் வைத்து சடங்குகள் நடைபெற்றுள்ளன. பின் அவரின் உடலை தேவாலயம் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. அப்போது, ஷெர்லி தனது கணவருக்கு இறுதி முத்தம் கொடுக்க குனிந்த நிலையில், அவர் பின் எழுந்திருக்கவில்லை. 

மரணம்: 

இதனை கவனித்த உறவினர்கள் அவரை தூக்க முற்பட்டபோது, அவர் அசைவில்லாமல் இருப்பதை உறுதி செய்தனர். பின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரின் மரணமும் உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அறிந்த தம்பதிகளின் 3 மகள்களும் கலங்கிப்போயினர். தம்பதிகளின் இறுதிச்சடங்கு ஒரே நேரம் & இடத்தில் நடக்க குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

இதையும் படிங்க: கணவரை கொன்று புதைத்து பலே நாடகம்.. 2 ஆண்டுகளுக்குப்பின் கள்ளக்காதலனுடன் சிக்கிய பெண்.. பரபரப்பு தகவல்.!