உடலுறவின் போது உயிரைவிட்ட மனைவி?.. நிர்வாணமாக்கி கட்டிவைத்து டார்ச்சர்.. கணவரின் பகீர் செயல்.!!  



husband killed his wife and said died during intercourse

உடலுறவின் போது உயிரிழந்ததாக மனைவியை கொலை செய்து கணவன் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜூஜூவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் ஜிம் மாஸ்டராக இருந்து வருகிறார். இவரின் மனைவி சசிகலா. தம்பதிகளுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகும் நிலையில், முதலில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதி பின்னாளில் கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டு வந்துள்ளனர். 

வேறொரு பெண்ணுடன் தொடர்பு?

இதனிடையே சம்பவத்தன்று இருவரும் தனிமையில் இருந்த போது சசிகலா உயிரிழந்துவிட்டதாக பாஸ்கர் கூறியுள்ளார். முன்னதாகவே வேறொரு பெண்ணுடன் பாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக சசிகலா சண்டையிட்ட நிலையில், சசிகலாவின் மரணம் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் கிழட்டுக் காமுகன் செய்த கீழ்த்தரமான செயல்.. வெளுத்துவாங்கிய பொதுமக்கள்.!

murder case

போலீசார் விசாரணை

இதனால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் பகீர்

விசாரணையில், பாஸ்கர் தனது மனைவியை நிர்வாணமாக்கி, செக்ஸ் டார்ச்சர் செய்து, கை, கால்களை கட்டிவைத்து துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது அம்பலமானது. மேலும் உடலுறவின் போது மனைவி இறந்ததாக நாடகமாடிய நிலையில், பாஸ்கர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்தனர். 

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் கிழட்டுக் காமுகன் செய்த கீழ்த்தரமான செயல்.. வெளுத்துவாங்கிய பொதுமக்கள்.!