ஓடும் பேருந்தில் கிழட்டுக் காமுகன் செய்த கீழ்த்தரமான செயல்.. வெளுத்துவாங்கிய பொதுமக்கள்.!



old man harassed a girl student in running bus perambalur

18 வயது மாணவிக்கு ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லையளித்த முதியவரை சக பயணிகள் அடித்து வெளுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி தற்போது கோடை விடுமுறை என்பதால் கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்று வந்துள்ளார். தினமும் இவர் பெரம்பலூர் வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. 

பாலியல் தொல்லை

இதனிடையே சம்பவத்தன்று வகுப்பை முடித்துக் கொண்டு மீண்டும் தனது சொந்த ஊர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மாணவிக்கு அவருடன் பயணித்த முதியவர் ஒருவர் பின்னால் இருந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: "பொது இடங்களிலும் பாதுகாப்பில்லையா..." இரயில் நிலையத்தில் பாலியல் சேட்டை.!! 30 வயது நபர் கைது.!!

முதியவரின் கீழ்த்தர செயல்

முதலில் தெரியாமல் கை பட்டிருக்கும் என நினைத்த மாணவி, முதியோரின் தொடர்ச்சியான செயலால் பதறியுள்ளார். இதனால் அவர் பேருந்திலேயே அலறிய நிலையில், பயணிகள் என்னவென்று விசாரித்த போது முதியவரின் கீழ்த்தரமான செயல் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை

sexual abuse 

இதனால் அவரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்த நிலையில், இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரித்ததில், இவர் வேப்பந்தட்டையை சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி ரத்தினம் என்பது உறுதியானது.

பெண்களை குறிவைத்து சில்மிஷம்

மேலும் இவர் பேருந்தில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து இதுபோன்ற சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: கோடை விடுமுறை நீட்டிப்பு?.. அமைச்சரின் பதிலால் குஷியில் மாணவர்கள்.!!