திடீரென வெடித்த அரசு பேருந்தின் டயர்.. சாலையோரத்தில் பாய்ந்த பேருந்து.! அதிர்ந்துபோன பயணிகள்.!

திடீரென வெடித்த அரசு பேருந்தின் டயர்.. சாலையோரத்தில் பாய்ந்த பேருந்து.! அதிர்ந்துபோன பயணிகள்.!



Viluppuram Perangiyur Govt Bus Tire Blasted Bus Hit Roadsides Accident No One Injury

அரசு பேருந்தின் டயர் திடீரென வெடித்து சிதறியதால், பேருந்து சாலையோரத்தில் பாய்ந்து சூரியஒளி சக்தி பயன்பாடு அமைப்பில் மோதி நின்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரங்கியூர் கிராமதிற்கு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இன்று பேரங்கியூர் அருகேயுள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசு பேருந்து பயணித்துக்கொண்டு இருந்தது. 

இந்த பேருந்தில், 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துகொண்டு இருந்த நிலையில், திடீரென பேருந்தின் டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 

Viluppuram

நல்ல வேலையாக விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்ட நிலையில், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.