ஓராண்டுக்குள் கசந்த முகநூல் காதல் திருமணம்.. புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.! 



trichy-girl-suicide-after-marriage-within-one-year

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கஜபிரியா (வயது 35). இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் முகநூலை பயன்படுத்தி வந்தபோது, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

கார்த்திக் காவலராக பணியாற்றி வந்த நிலையில், சமூக கட்டமைப்புகளை கடந்து காதல் ஜோடி அன்பின் பெயரில் காதலில் விழுந்து இருக்கிறது. 

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் இருந்து வெளியேறி திருமணமும் செய்துகொண்டது. 

திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனால் தனது தாய் வீட்டிற்கு வந்த கஜப்பிரயா, திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.