#Breaking: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு தேதிகள்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

தமிழ்நாடு மாநில பள்ளி வாரியத்தின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாகவே வழங்கப்பட்டு இருந்த தேர்வு அட்டவணையின்படி 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விரைவில் தொடங்குகிறது.
இதையும் படிங்க: பயிற்சி மருத்துவர்களிடம் கஞ்சா பறிமுதல்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 5,2025 தேதி முதல் தேர்வு தொடங்கி நடைபெற்று ஏப்ரல் 21,2025 அன்று நிறைவுபெறுகிறது.
அதேபோல, ஆறாம் வகுப்பு முதல் 09 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் ஏப்ரல் 8, 2025 முதல் தொடங்கி ஏப்ரல் 24, 2025 வரை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: ஐஸ்கிரீம் விற்பனையாளருக்கு நேர்ந்த சோகம்.. சாலையை கடக்கும்போது கார் மோதி துயரம்.. பரிதாப பலி.!