அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை எப்போது?? வெளியான முக்கிய அறிவிப்பு!!

அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை எப்போது?? வெளியான முக்கிய அறிவிப்பு!!



TN School admission for year 2021 - 2022

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா காரணமாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக மாணவர்கள் கடந்த ஆண்டு பள்ளிக்கு சென்று படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பாடம் படித்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. பிளஸ் 2 வகுப்பை தவிர மற்ற அனைத்து வகுப்பினரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 27 லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக்கல்வித்துறை வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.