FLASH : போடு வெடிய.... கல்லூரி மாணவர்களுக்கு "வெற்றி மடிக்கணினி திட்டம்" வழங்க பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.!!!
தமிழக அரசின் முதல் பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் முக்கிய அறிவிப்பாக வெற்றி மடிக்கணினி திட்டம் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் இந்தத் திட்டத்துக்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு
தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன், கல்லூரி மாணவர்களின் கல்வித் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். இதற்காக ரூ.2,000 கோடி நிதி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: BREAKING: தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே விஜய் முதல்வராக வந்தார்..! சட்டசபையில் நிதியமைச்சர் பெருமிதம்...!!!
மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் மடிக்கணினி திட்டம்
கொரோனா பரவலுக்குப் பிறகு, போதிய நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு சவால்கள் காரணமாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படாமல் இருந்தது. இதையடுத்து, தற்போதைய டிஜிட்டல் கல்விச் சூழலை கருத்தில் கொண்டு அந்தத் திட்டத்தை அரசு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்
கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி, தொழில்நுட்பக் கற்றல் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2,000 கோடி நிதியுடன் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: மகிழ்ச்சி செய்தி! உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்வு! சற்று முன்... தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு…!!!