BREAKING: தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே விஜய் முதல்வராக வந்தார்..! சட்டசபையில் நிதியமைச்சர் பெருமிதம்...!!!



tn-budget-2026-finance-minister-maria-wilson-vijay-spee

தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய மரிய வில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் நோக்கங்கள் மற்றும் கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார். தமிழ்நாட்டு மக்களுக்கான நன்றிக் கடனைச் செலுத்தும் எண்ணத்துடன்தான் முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

விஜய் தலைமையைப் பாராட்டிய நிதி அமைச்சர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் கருத்தை மேற்கோள் காட்டிய மரிய வில்சன், பிறப்பால் அனைவரும் சமம் என்ற உயர்ந்த கோட்பாட்டை முன்னிறுத்தியே முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனால் தமிழக மக்களின் மனதில் அவர் தனித்த இடத்தைப் பெற்றுள்ளதாகவும் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.

இதையும் படிங்க: BREAKING : மகிழ்ச்சி செய்தி! அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு கல்லூரியில் சேரும்போது ரூ.8,000 அள்ளிக் கொடுக்கும் புதிய திட்டம்...! தமிழக அரசின் அல்டிமேட் பட்ஜெட் பிளான்...!!!!

வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பெருமிதம்

ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே தேர்தலின்போது அளிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றத் தொடங்கியுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து, மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அரசின் சாதனைப் பயணம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்

தமிழகத்தின் நிதி நிலையை சீரமைக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான மக்கள் நலத் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் மரிய வில்சன் தெரிவித்தார். மேலும், மக்கள் பக்கம் நின்று செயல்படும் அரசாக தவெக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை கடந்த சில மாதங்களின் நிர்வாகமே எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: இனிமேலும் தள்ளி போட முடியாது! மாதம் ரூ 2,500.... அரசுக்கு அடுத்தடுத்து அதிகரிக்கும் நெருக்கடி! பட்ஜெட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!!!