அரசு பேருந்தா? தனியார் பேருந்தா?.. அசுரவேகத்தில் பாய்ந்த பேருந்துகளால், அடிவயிறு கலங்கி கதறிய பயணிகள்.!

அரசு பேருந்தா? தனியார் பேருந்தா?.. அசுரவேகத்தில் பாய்ந்த பேருந்துகளால், அடிவயிறு கலங்கி கதறிய பயணிகள்.!


tiruppur-govt-bus-and-private-bus-racing-police-warning

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, இன்று காலை 9 மணியளவில் அரசு பேருந்து அவிநாசிக்கு புறப்பட்டது. இதனைப்போல தனியார் பேருந்தும் அவிநாசிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணம் செய்தது. 

இந்த இரண்டு பேருந்துகளும் ஒருவரையொருவர் முந்தி அசுரவேகத்தில் பயணம் செய்த நிலையில், சில இடங்களில் இரண்டு வாகனமும் மோதுவது போல சென்றுள்ளனர். 

இதனால் பதறிப்போன பயணிகள் செய்வதறியாது விழிபிதுங்க, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் கண்காணிப்பு வானங்களில் விரைந்த காவல் துறையினர், இரண்டு வாகனத்தையும் நிறுத்தி ஓட்டுனர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.