லாரி ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி: பேருந்து நிறுத்தத்தில் வாகனம் மோதி நடந்த சோகம்., பரிதாப பலி.!

லாரி ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி: பேருந்து நிறுத்தத்தில் வாகனம் மோதி நடந்த சோகம்., பரிதாப பலி.!



Tirunelveli Lorry Accident Driver Death 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குலவணிகர்புரம் பகுதியில், நேற்று லாரி ஒன்று சென்றுள்ளது. லாரியை சங்கரலிங்கம் என்பவர் இயக்கியிருக்கிறார். 

இந்நிலையில், ஓட்டுநர் சங்கரலிங்கத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே, அவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்துள்ளது. 

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆனால், லாரி ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக நெல்லை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.