ம்மா..ம்மா., தாயின் உடலை கண்டு கதறியழுத 3 மாத பிஞ்சுகுழந்தை.. காதல் திருமணம், போதையால் தடம்மாறிய விபரீதம்..! இளம் தம்பதி தற்கொலை.!

ம்மா..ம்மா., தாயின் உடலை கண்டு கதறியழுத 3 மாத பிஞ்சுகுழந்தை.. காதல் திருமணம், போதையால் தடம்மாறிய விபரீதம்..! இளம் தம்பதி தற்கொலை.!



Thiruvarur Nannilam Love Married Couple Suicide

 

காதல் திருமணம் செய்த பெண்மணி ஒன்றரை ஆண்டுகளுக்குள் கணவரின் மதுபோதை பழக்கத்தால் தற்கொலை செய்து உயிரிழந்தார். மனைவியின் தற்கொலையை அறிந்த காதல் கணவரும் தற்கொலை செய்துகொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்டலட்சுமி. இவரது கணவர் சுபாஷ் (வயது 26). தம்பதிகள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது தம்பதிக்கு மூன்று மாதகுழந்தை உள்ள நிலையில், சுபாஷ் தினமும் குடித்துவிட்டு மனைவியை சந்தேகித்து சண்டைபோடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் அவரது மனைவி தினம் தினம் மனவேதனை அடைந்துள்ளார்.

thiruvarur

மேலும் அஷ்டலட்சுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவலறிந்த சுபாஷும் மனைவி இறந்த ஏக்கத்தில் மனமடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தாய், தந்தையை இழந்த பச்சிளம் சிசு தாயின் உடலருகே ம்மா, ம்மா என கதறி அழுதுகொண்டிருந்தது காண்போரை பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது நாட்டிற்கும், வீட்டிற்கும், உயிருக்கும் கேடு...