10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. காமுகன் மீது குண்டர் பாய்ச்சல்.. காவல்துறை அதிரடி.!



Thiruvarur Minor Girl Abuse Case Culprit Arrested under Goondas

21 வயது இளைஞன் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அவனின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அடியக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரின் மகன் ஷேக் தாவூத் (வயது 21). இப்பகுதியில் 10 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியை ஷேக் தாவூத் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்த விஷயம் தொடர்பாக திருவாரூர் தாலுகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஷேக் தாவூத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும், அவனின் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சவும் அதிகாரிகள் முடிவெடுத்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அம்மாவட்ட ஆட்சியர் அதனை உறுதி செய்யவே, ஷேக் தாவூத்தின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருவாரூர் சிறையில் இருந்த ஷேக் தாவூத், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து இருக்கிறார்.