3 நாட்களாக உன் வீட்டுல என்ன வேலை? கள்ளக்காதல் ஜோடியை கம்பத்தில் கட்டிவைத்து கவனித்த பொதுமக்கள்..! 



in Telangana a Illegal Affair Couple Beaten By Public and Tie Knot on Electric Pole 

கள்ளக்காதல் வயப்பட்ட ஜோடிக்கு அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தண்டனை கொடுத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தப்பள்ளி மாவட்டம், சுல்தானாபாத் பகுதியில் வசித்து வருபவர் மௌனிகா. இவர் பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கை பயன்படுத்தி வந்ததாக தெரிய வருகிறது. அப்போது பூபல்பள்ளி பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதல் பழக்கம்:

இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறி இருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட இளைஞர் மௌனிகாவின் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் அக்கம்பக்கத்தினர் இதனை கண்டு கொள்ளவில்லை. 

இதையும் படிங்க: நீச்சல் தெரியதால் சோகம்.. திருமண வீட்டில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்.!

India

தர்மத்தை நிலைநாட்டினர்களாம்:

ஆனால் இருவரின் சேட்டைகள் எல்லை மீறி சென்றதால், அவர்கள் இருவரையும் நடுரோட்டில் கட்டி வைத்து பொதுமக்கள் வெளுத்தெடுத்துள்ளனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தவர்கள், தர்மத்தை நிலைநாட்ட இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர். 

தற்போது இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. பெண்மணியின் கணவர் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ வைரல்:

இதையும் படிங்க: செருப்பால் அடித்ததற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்மணி..! இதெல்லாம் தேவையாம்மா?