ஊருவிட்டு ஊருவந்து லாட்ஜில் உயிரிழந்த வாலிபர் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு திண்டாடும் போலீஸ்..!

ஊருவிட்டு ஊருவந்து லாட்ஜில் உயிரிழந்த வாலிபர் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு திண்டாடும் போலீஸ்..!



the-incident-in-which-a-lodge-resident-died-in-the-bath

கடலூர் தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் தங்கியிருந்தவர் பாத்ரூமில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலையம் அருகே தனியார் லாட்ஜ் உள்ளது. அந்த லாட்ஜில் கடந்த 18 ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தொழில்ரீதியாக தங்க வாடகைக்கு அறை எடுத்துள்ளார். அதன்படி கடந்த 18 ஆம் தேதி முதல் அறையில் தங்கியுள்ளார்.

18 ஆம் தேதி அறைக்கு சென்றவர் 2 நாட்களான நிலையில் அறையிலிருந்து வெளியில் வராததால் லாட்ஜில் பணிபுரிந்த ஊழியர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து பார்த்த போது அங்கிருந்த பாத்ரூமில் இறந்த நிலையில் கிடந்தார்.

இதனை தொடர்ந்து இறந்த நபரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் இறந்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஆண்டிமடம் வரதராஜன் பேட்டையை சேர்ந்த ஜெபஸ்டின் (41)  என்பது தெரியவந்தது.

கடந்த 18 ஆம் தேதி கடலூருக்கு வந்தவர் மீண்டும் வீட்டிற்கு செல்லாததால் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அங்கும் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜெபஸ்டினை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெபஸ்டின் உயிரிழந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்ததற்கான காரணம் என்ன? என்பதனை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.