12 வயது சிறுவன் 15 வயதுடைய 2 சிறார்களால் கூட்டுப்பாலியல் பலாத்கார முயற்சி : ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி பயங்கரம்..! திண்டுக்கல்லில் பேரதிர்ச்சி.!!

12 வயது சிறுவன் 15 வயதுடைய 2 சிறார்களால் கூட்டுப்பாலியல் பலாத்கார முயற்சி : ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி பயங்கரம்..! திண்டுக்கல்லில் பேரதிர்ச்சி.!!


thanjavur-minor-child-sexual-harassed-forced-homo-sexua

சிறுவனை வீட்டிற்கு அழைத்துச்சென்று 2 பேர் சேர்ந்து கூட்டாக அத்துமீற முயற்சித்த பயங்கரம் அதிரவைத்துள்ளது. சிறுவயதில் கண்ட ஆபாச வீடியோ பார்த்து பழுத்துப்போன பாவிகளின் பகீர் செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகேயுள்ள கிராமத்தில் 12 வயதுடைய சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். 

சம்பவத்தன்று, சிறுவனை அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அழைத்து சென்றுள்ளனர். சிறுவனை தங்களின் வீட்டிற்கு அழைத்துச்சென்ற இருவரும், அவனை கூட்டுபலாத்காரம் செய்ய முயற்சித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். 

thanjavur

இதனால் பதறிப்போன சிறுவன் பயத்தில் கதறவே, அக்கம் பக்கத்தினர் வந்துவிட்டால் என்னவாகும் என்று எண்ணிய 2 மாணவர்களும் சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். பதறிப்போன சிறுவன் பயத்துடன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விஷயத்தை கூறியுள்ளான். 

இதனைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறார்கள் 2 பேரையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.