நாமக்கல்லில் பயங்கரம்... நார் மில்லில் உள்ள மிஷினில் சிக்கி குழந்தை உயிரிழப்பு... தாய் கண்ணெதிரே நிகழ்ந்த கொடூரம் சம்பவம்..!

நாமக்கல்லில் பயங்கரம்... நார் மில்லில் உள்ள மிஷினில் சிக்கி குழந்தை உயிரிழப்பு... தாய் கண்ணெதிரே நிகழ்ந்த கொடூரம் சம்பவம்..!



terrible-in-namakkal-child-died-after-getting-stuck-in

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பஞ்சாரம் - மனிஷா தேவி தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தீஷ்குமார் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் நடத்தி வரும் நார்மில்லில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை மனிஷா தேவி தனது குழந்தையை தீஷ்குமாரை தனது மடியில் வைத்துக் கொண்டே தேங்காய் நார்மில்லில் உள்ள மெஷினில் வேலை செய்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக தீஷ்குமார் ஓடிக்கொண்டிருக்கும் மிஷினின் பெல்ட்டை பிடித்த போது தாயின் கண்ணெதிரே திடீரென குழந்தை மெஷினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

namakkal

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மனிஷா கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை தீஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாயின் கண்ணெதிரே குழந்தை மெஷினில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.