பேரதிர்ச்சி வீடியோ... அரசு பேருந்தின் படியில் தொங்கி சாலையோரம் விழும் மாணவர்கள்.. தென்காசி அருகே பகீர்.!
பேரதிர்ச்சி வீடியோ... அரசு பேருந்தின் படியில் தொங்கி சாலையோரம் விழும் மாணவர்கள்.. தென்காசி அருகே பகீர்.!
புளியரையில் இருந்து தென்காசி செல்லும் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் சாலையோரம் விழும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, புளியரையில் இருந்து தென்காசி நோக்கி பயணம் செய்யும் அரசு பேருந்தில் மாணவர்கள் அதிகளவு பயணம் செய்துள்ளனர். இவர்களில் சிலர் வேண்டும் என்றே படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்ததாக தெரியவருகிறது.
இவ்வாறு சென்ற மாணவர்கள் குறிப்பிட்ட சமயத்திற்கு மேல் கம்பிகளை பிடித்து தொங்க இயலாமல், சாலையின் ஓரத்தில் விழும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.