காதலனுடன் ஓடிய மனைவி... 5 வயது சிறுவன் அடித்து கொலை.!! டெம்போ டிரைவர் வெறி செயல்.!!



tempo-driver-brutally-murders-step-son

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி காதலனுடன் ஓடியதால் ஆத்திரமடைந்த கணவன் 5 வயது மகனை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தப்பியோடிய நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கு அபினவ் என்ற 5 வயது மகன் இருந்தான். இந்நிலையில் செல்வி அதே பகுதியைச் சேர்ந்த டெம்போ டிரைவரான செல்வ மதன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. செல்வ மதனை திருமணம் செய்து கொண்ட பிறகும் செல்விக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

tamilnadu

இதனையடுத்து தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடியிருக்கிறார் செல்வி. இதனால் தனது மனைவியின் மகன் அபினவ் மற்றும் தனது மகனை செல்வ மதன் பராமரித்து வந்துள்ளார். மேலும் மனைவி ஓடி சென்ற ஆத்திரத்தில் தனது மனைவியின் மகனான அபினவை அடித்து துன்புறுத்தியிருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் மது போதையிலிருந்த செல்வ மதன் மனைவி மீதிருந்த ஆத்திரத்தில் சிறுவன் அபினவ்வை அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதன் பிறகு வீட்டை விட்டு ஓடி தலை மறைவான அவர் வழக்கறிஞரை சந்தித்து கொலை சம்பவம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!

இது தொடர்பாக வழக்கறிஞர் கொடுத்த தகவலின் அடிப்படையில் செல்வ மதன் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் இறந்த சிறுவனின் அழுகிய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த செல்வமதனை தேடி வந்த காவல்துறையினர் சுசீந்திரம் அருகே அவரை கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் தனது மனைவியின் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் செல்வ மதன். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்..." 5 வயது சிறுவன் கொலை.!! தந்தை தலைமறைவு.!!