இம்மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்குகளில் ரூ.2000 தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

இம்மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்குகளில் ரூ.2000 தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!


tamilnadu-chief-minister-edapadi-palanisamy

இம்மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 2000 ஏற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி உள்ளது. அதில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். 

tamilnadu cm

ரூ.2,000 உதவித்தொகை வழங்க ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும் கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் சிறப்புதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த ரூபாய் 2000 ஆனது இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 60 லட்சம் பயனாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.