Video : ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண அலங்கார காணொளி வைரல்!!!
தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு.... அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!
பொதுமக்களின் அன்றாட உணவுத் தேவையை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்களை விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி உணவுப் பொருட்களை பெறும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பாராட்டைப் பெறுகின்றன.
ரேஷன் கடைகள் மற்றும் பயனாளர்கள்
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இருப்பினும், வயது மூத்தவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களால் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு செல்வது சிரமமாக இருந்து வருகிறது.
தாயுமானவர் திட்டம்
இந்த சிக்கலை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடங்கியுள்ள தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த மக்கள் நலத் திட்டம் மூலம் பலர் நேரடி பயனை அனுபவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிட்டாத்தீங்க.... ரேஷன் அட்டைதாரர்களே தமிழகம் முழுவதும் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை..... அரசு வெளியிட்ட அறிவிப்பு!
ஜனவரி மாத விநியோக அறிவிப்பு
இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான உணவுப் பொருட்கள் விநியோகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று ஜனவரி 4 மற்றும் நாளை ஜனவரி 5 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் பேருக்கு இந்த வீடு தேடி விநியோகம் நடைபெற உள்ளது.
வழக்கமாக மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த பணிகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இம்முறை முன்கூட்டியே மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதோடு, பொங்கல் முன்னேற்பாடு நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஷ்! ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு! ஜனவரி 7 ஆம் தேதி..... தமிழக அரசின் புதிய முடிவு.!