கண்கலங்க வைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. தமிழகத்தில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணம்..

கண்கலங்க வைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. தமிழகத்தில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணம்..



Tamil Nadu current corona count and death count report

தமிழகத்தில் இன்று புதிதாக 1,052 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,052 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 8,09,014 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 311 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 114 பேருக்கும்  கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

corona

அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 17 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 12,012 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சற்று ஆறுதலாக 1,139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,611 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 9,391 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.