குடிபோதையில் 9 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

குடிபோதையில் 9 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!


sithappa arrested for abused young girl

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் மாணவியின் பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி, தனது சித்தப்பா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியில்  கொரானா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது மருத்துவ குழுவினர் சிறுமியை பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் கடந்த டிசம்பர் மாதம் குடிபோதையில் இருந்த சித்தப்பா நந்தகுமார் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் சித்தப்பா நிபந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.