பள்ளி சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து, வீடியோவை வாட்சப்பில் வெளியிட்ட கொடூரன்!. சமூக ஆர்வலரின் அதிர்ச்சி நடவடிக்கை!.

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பிய இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூரைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் கவரும் வகையில் பேசி பழகியுள்ளார்.
மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
அதை செல்போன் மூலம் மாணவிக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்து. அந்த வீடியோ பதிவை வாட்ஸ்-அப் மூலம் தங்களது நண்பர்களுக்கு சதீஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் சமூக ஆர்வலர் ஒருவருக்கும் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், அவர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை தன்னை போலீசார் தேடுவதை அறிந்த சதிஷ் தலைமறைவானான். மேலும் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் தலைமறைவாக இருந்த சதீஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.