பார்க்கவே மனசு பதறுது..!! ஒரு நொடியில் மோதிய அரசு பேருந்து.. சம்பவ இடத்திலேயே பலியான மாணவன்..! சிசிடிவி வீடியோ..

பார்க்கவே மனசு பதறுது..!! ஒரு நொடியில் மோதிய அரசு பேருந்து.. சம்பவ இடத்திலேயே பலியான மாணவன்..! சிசிடிவி வீடியோ..



school-boy-accident-video-near-aaroor

அரசு பேருந்து மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலையே உயிரிழந்த  சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முத்தானூர் என்ற கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் கன்னியப்பன். அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துவரும் கன்னியப்பன் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுவிட்டு, டிவிஎஸ் XL இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ஆரூர் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே கன்னியப்பன், தனக்கு பின்னால் அரசு பேருந்து வருவதை கவனிக்காமல் திடீரென தனது இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளார்.

இதில் நொடிப்பொழுதில் அரசு பேருந்து கன்னியப்பன் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச்சென்று நின்றுள்ளது. இந்த விபத்தில் தலையில் காயமடைந்த கன்னியப்பன் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பின்னால் பேருந்து வருவதை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தை திருப்பியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது