மதன் ரவிச்சந்திரன் வீடியோ கேசட்டை திருடியதாக சவுக்கு மீடியா காவல் நிலையத்தில் புகார்.!



Savukku Media Complaint Against Madhan Ravichanthiran 

 

சவுக்கு மீடியா என்ற தனியார் ஊடக நிறுவனம் சென்னை டி. நகர் ராஜா பதார் தெருவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை மனித வளமேம்பாட்டு அதிகாரியாக சைரன் குமார் பணியாற்றி வருகிறார். 

இவர் அங்குள்ள சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா கீதையன் ஆகிய இருவர், தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த லாக்கரில் இருந்து வீடியோ பதிப்புகளை திருடி இருக்கின்றனர். 

இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், அதனை தங்களின் யூடியூப் சேனலில் மார்ச் 28 அன்று ஓளிபரப்பு செய்துள்ளனர். அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மதனுக்கு எதிராக புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.