மூன்று குழந்தைகள்! அம்மா.. அம்மா தவிக்கும் பிஞ்சுகள்.... தாயின் உயிரைக் குடித்த குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை! நடந்தது என்ன? கதறும் குடும்பத்தினர்...!!!



salem-woman-dies-after-family-planning-surgery

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம் தாய் திடீரென உயிரிழந்தார். மோதூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதிக்கு ஆரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுமதிக்கும் மாதேஸ்வரனுக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் அவர்களுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து வாழப்பாடி அருகே உள்ள ஆரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமதிக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: Ex மினிஸ்டரின் மகன் குத்திக்கொலை.. சொந்தங்களுக்குள் நடந்த பஞ்சாயத்தில் பயங்கரம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு.! 

சிகிச்சைக்குப் பிறகு திடீரென மோசமடைந்த உடல்நிலை

அறுவை சிகிச்சை முடிந்த சிறிது நேரத்திலேயே சுமதியின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இதனால் அவர் உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுமதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மருத்துவர்களின் சிகிச்சையில் தவறு என உறவினர்கள் குற்றச்சாட்டு

இளம் தாயின் திடீர் மரணத்துக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாயை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகளின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அரசு தரப்பில் இழப்பீடு வழங்கும் வரை சுமதியின் உடலை உடற்கூராய்வுக்குப் பிறகு பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் வலியுறுத்தல்

சுமதியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே உறவினர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: தூத்துக்குடியில் அதிர்ச்சி.. பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு தொடர் பாலியல் தொல்லை.?