சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘டிசி’ பட நாயகி.. ஹெச்.வினோத் படத்தில் இணைந்த புதிய கூட்டணி!
திமுக-வில் பரவும் புகைச்சல்! மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு.... அலறும் அறிவாலயம்!!!
திருச்சி திமுகவில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கே.என். நேருவின் மகனுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் கட்சிக்குள் ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
மாவட்ட அரசியலில் இருந்து கே.என். நேரு விலகியிருந்தாலும், தனது மகனின் அரசியல் எதிர்காலத்துக்காக திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் பொறுப்பை பெற்றுத்தந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பொறுப்பின் கீழ் 3 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெறும் நிலையில், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 2 தொகுதிகளை மட்டுமே உள்ளடக்கிய தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிரடி மாற்றத்தால் ஆட்டத்தை ஆட ஆரம்பித்த திமுக! 45, 60, 70.. ஸ்டாலின் போட்ட புதிய கணக்கு..! இனி இதுதான் ரூல்ஸ்...!!!
மாவட்டப் பிரிவில் எழும் அரசியல் அதிருப்தி
திருச்சி திமுகவில் நீண்ட காலமாக செல்வாக்கு செலுத்தி வரும் அன்பில் குடும்பத்தைச் சேர்ந்தவர் அன்பில் மகேஸ். மறைந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் என்பதுடன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்ற அடையாளமும் அவருக்கு உள்ளது. இத்தகைய பின்னணி இருந்தும், மாவட்டப் பொறுப்புகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கையில் அவருக்கு குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக ஆதரவாளர்கள் மத்தியில் குமுறல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகள் மத்தியில் பரவும் புகைச்சல்
திருச்சி மாநகர மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்டம் தொடர்பான கட்சி அமைப்பு மாற்றங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள், திமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அன்பில் மகேஸ் தரப்புக்கு எதிர்பார்த்த அளவிலான அரசியல் முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற பேச்சு கட்சியினரிடையே எழுந்துள்ளதாக தெரிகிறது.
அதே நேரத்தில், கே.என். நேரு தனது குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை தொடர்ந்து வலுப்படுத்தும் வகையில் செயல்படுவதாக அன்பில் மகேஸ் ஆதரவாளர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் தொடர்பான இறுதி முடிவு வெளியாகும் வரை இந்த விவகாரம் திருச்சி திமுகவில் தொடர்ந்து கவனம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒட்டுமொத்தமா மாற போகுது.... ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு! இனி இவர்களுக்குப் பதவி கிடையாது... திமுக - வில் நடக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்...!!!