அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடும் அஜித்; தொழில்நுட்பத்துடன் எடிட் செய்யப்பட்ட வைரல் வீடியோ இதோ.!
ஆணுறுப்பை அறுத்து நடந்த கொலை: சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்த தம்பதி அதிர்ச்சி செயல்.!
ஆணுறுப்பை அறுத்து நடந்த கொலை: சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்த தம்பதி அதிர்ச்சி செயல்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள புதுரோடு, பூனை கரடு பகுதியில் வசித்து வருபவர் ஐயம்பெருமாள். இவரின் வீட்டிற்கு தம்பதி என்று கூறி வந்த நபர்கள், வாடகைக்கு குடிவந்துள்ளனர்.
இவர்கள் குடிவந்த மறுநாளில் இருந்து, கணவன்-மனைவி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறை தீர்ப்பதற்கு தம்பதியின் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐயம்பெருமாள் வீட்டின் மொட்டை மாடியில் ஆணுறுப்பு அறுக்கப்பட்ட ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். தம்பதிகளும் தலைமறைவாகியுள்ள நிலையில், இது தொடர்பாக தகவல் இருந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கிடந்தவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியை சார்ந்த தியாகு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி விசாரணை நடந்து வருகிறது.