இறந்த பிறகும் 14 பேருக்கு உயிர் கொடுத்த நபர்..! நெகிழ்ச்சியடைய வைத்த மனைவியின் செயல்..!

இறந்த பிறகும் 14 பேருக்கு உயிர் கொடுத்த நபர்..! நெகிழ்ச்சியடைய வைத்த மனைவியின் செயல்..!


Salem man donates organs to 14 members get live back

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு அதன்மூலம் 14 பேர் மறுவாழ்வு பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (50) என்பவர் மருத்துவக் காப்பீட்டு முகவராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கடந்த 19ம் தேதி விக்கிரவாண்டி அருகே காரில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் பலத்தகாயம் அடைந்து சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

Mystery

இதனை அடுத்து சுரேஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க சுரேஷின் மனைவி முன்வந்தார். பின்னர் தமிழ்நாடு உடல் உறுப்புதான ஆணையத்திடம் இதற்கான அனுமதி வாங்கப்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்து சுரேஷின் இதயம், கிட்னி, கல்லீரல், கணையம் போன்ற அணைத்து உறுப்புகளும் தானமாக வழங்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 14 பேருக்கு வழங்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப்பட்டுள்ளது.

தான் இறந்தும் 14 பேரின் உயிரை சுரேஷ் காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.