தலைவா முடிவை மாற்றுங்கள்.! ரஜினி வீட்டின் முன்பு போராட்டத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்.!

தலைவா முடிவை மாற்றுங்கள்.! ரஜினி வீட்டின் முன்பு போராட்டத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்.!


rajini fans request to rajini

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதி புதிய கட்சியை குறித்து அறிவிப்பு வெளியிட்டு, 2021 அரசியல் கட்சியை துவங்குவதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கிடையில் அவர் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டது. 

மேலும் நடிகர் ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. ஆனால் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்ட நிலையில், ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை சீரணத்தை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 
 rajini
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தனது  உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக நடிகர் ரஜினி தான் அரசியல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.  இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ரஜினியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத ரஜினி ரசிகர்கள் நேற்று ரஜினியின் வீட்டின் முன் திடீரென உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினியின் அறிவிப்பால் தாங்கள் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் செய்தனர். இதனையடுத்து அப்பகுதியில்  போலீசார் குவிக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது.