அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான நேரம் குறைப்பு! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான நேரம் குறைப்பு! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!



Purchasing time reduced in tamilnadu

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது 190 நாடுகளில் தீவிரமாக  பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில்,  இதுவரை 2900பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் யாரும் வீட்டை வெளியே விட்டு செல்லக் கூடாது எனவும், சமூக விலகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Market

ஆனாலும் சிலர் அதனை பின்பற்றாமல் ஆர்வக்கோளாறில் தொடர்ந்து வெளியே சுற்றி வருகின்றனர். மேலும் இவர்களை கண்டித்து போலீசார்கள் நூதன தண்டனைகளும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுபடுத்தும் விதமாக, மக்கள் அத்தியாவசியப் பொருட்களை  வாங்குவதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்