"நீயும், நானும் சேர்ந்து"., +2 மாணவியிடம் வாழைப்பழமாக பேசி 2 இலட்சத்தை அபேஸ் செய்த காதலன்.. அதிர்ந்துபோன பெற்றோர்.!

"நீயும், நானும் சேர்ந்து"., +2 மாணவியிடம் வாழைப்பழமாக பேசி 2 இலட்சத்தை அபேஸ் செய்த காதலன்.. அதிர்ந்துபோன பெற்றோர்.!



police-investigation-boy-for-2lakhs-cheeting-a-girl-che

12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, 2லட்சம் பணம் மற்றும் நகை ஆகியவற்றை பறித்த வாலிபரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை போரூர், கோடம்பாக்கம் பகுதியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் ஒரு மாணவி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி தினமும் தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பாட்டியின் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அதே பகுதியில் 20 வயதுடைய வாலிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சிறிது நாட்களில் அது காதலாக மாறியுள்ளது. மேலும், மாணவியிடம் அந்த வாலிபர் 'தான் புதிய இரு சக்கரம் ஒன்றை வாங்கி அதில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து, பல இடங்களுக்கு ஊர் சுற்றி வர வேண்டும்' என்று ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார்.

chennai

இதனால் மாணவி தனது வீட்டில் இருந்த 2லட்சம் பணம் மற்றும் தான் அணிந்திருந்த ஒரு பவுன் நகை போன்றவற்றை காதலனிடம் கொடுத்து இருசக்கர வாகனம் வாங்குமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பணத்தை காணாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு, தனது மகள் ஒருவரை காதலித்தது தெரியவந்துள்ளது.

அத்துடன் மகளிடம் விசாரித்த நிலையில், வாலிபர் ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பணம் மற்றும் நகையை வாங்கியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், அசோக் நகர் காவல் துறையினரிடம் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி நகை மற்றும் பணம் பறித்த வாலிபர் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.