கொரோனா நேரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கொரோனா நேரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதத்தில் எந்த மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரமாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்றும் 17-வது நாட்களாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வறுமையில் உள்ள நிலையில் பெட்ரோல் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.82.87ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 50 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.30 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.