பஸ்ஸில் கேட்க ஆள் இல்லாமல் கிடந்த 5 சவரன் தாலிச்சங்கிலி..! உரியவரிடம் ஒப்படைத்த அரசுப் பேருந்து ஊழியர்கள்..! குவியும் வாழ்த்து..!
பஸ்ஸில் கேட்க ஆள் இல்லாமல் கிடந்த 5 சவரன் தாலிச்சங்கிலி..! உரியவரிடம் ஒப்படைத்த அரசுப் பேருந்து ஊழியர்கள்..! குவியும் வாழ்த்து..!
அரசு பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தாலி சங்கிலியை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கெட்டவாடி என்ற ஊரில் இருந்து அரசு பேருந்து ஓன்று வந்துள்ளது. பேருந்தில், சில பயணிகள் மட்டுமே இருந்த நிலையில் அதில் யாரோ ஒருவர் 5 சவரன் தாலி சங்கிலியை தவறவிட்டுள்ளார். ஷீட்டுக்கு அட்டையில் தாலி சங்கிலி கிடப்பதை பார்த்த பேருந்தின் நடத்துனர் மகேஷ் இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் ரமேஷிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேருந்தில் இருந்த பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டு, சங்கிலியை தொலைத்தவரை தங்களிடம் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். பின்னர் பேருந்து கெட்டவாடிக்குச் சென்றபோது அதில் பயணித்த துண்டம்மா என்ற பெண்தான், தன்னுடைய தாலிச் சங்கிலியை தவறவிட்டது தெரியவந்தது. பின்னர், அந்த பெண்ணை வரவழைத்து அவரது தங்கச்சங்கிலியை நடத்துநரும், ஓட்டுநரும் ஒப்படைத்தனர்.
அரசு பேருந்து ஓட்டுனர்களின் இந்த நேர்மையான செயலுக்கு பலரிடம் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.