4 வயது சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை! 60 வயது முதியவரின் கொடூர செயல்!
4 வயது சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை! 60 வயது முதியவரின் கொடூர செயல்!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை உத்திர குளம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ், இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ராமதாஸ் அவரது கடைக்கு வரும் சிறுமிகளிடம் விளையாடுவது போன்று உடலில் அங்குஇங்கு கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த 4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார் ராமதாஸ். ராமதாஸ் நடந்துகொண்டதைப்பற்றி அக்குழந்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின்பேரில் மகளிர் போலீசார் ராமதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.